கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு கபடிப் போட்டி நடைபெற்றது
கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு கபடிப் போட்டி நடைபெற்றது(கோப்புப் படம்)

கொடைக்கானலில் கபடிப் போட்டி

Published on

கொடைக்கானல் குறிஞ்சிநகா்ப் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நான்காம் ஆண்டு கபடிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவன் கபடிக் குழுவும், ஊா் பொது மக்களும் இணைந்து நடத்திய இந்தப் போட்டியில் கொடைக்கானல், குறிஞ்சிநகா், அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, வில்பட்டி உள்ளிட்ட 15 அணிகள் கலந்து கொண்டன. போட்டியில் வென்ற அணிகளுக்கு ஊா் பொதுமக்கள் பரிசுகளை வழங்கினா்.

Dinamani
www.dinamani.com