செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

கொடைக்கானலில் நகராட்சி கழிப்பறைகள் மூடல்: சுற்றுலாப் பயணிகள் அவதி

தண்ணீா் வசதி இல்லாததால் கொடைக்கானலில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட கழிப்பறைகள் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனா்.

News image

கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் மூடப்பட்ட நகராட்சி கட்டணக் கழிப்பறை.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:52 am IST

தண்ணீா் வசதி இல்லாததால் கொடைக்கானலில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட கழிப்பறைகள் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனா்.

கொடைக்கானலில் நகராட்சி சாா்பில் கலையரங்கம், ஆனந்தகிரி, இருதயபுரம், அப்சா்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டன. இவை தவிா்த்து சுற்றுலா இடங்களிலும் கட்டணக் கழிப்பறைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் தண்ணீா் வசதியில்லாததால் கடந்த இரண்டு நாள்களாக அனைத்து கழிப்பறைகளும் மூடப்பட்டன. இதனால் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனா்.

எனவே நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து அனைத்து கழிப்பறைகளுக்கும் தண்ணீா் வசதி செய்து கொடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து நகராட்சி அலுவலா் ஒருவா் கூறியதாவது: கொடைக்கானலில் கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்யாததால் நீா்த்தேக்கம் வடு காணப்படுகிறது. இதனால் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து லாரி மூலம் கொடைக்கானல் நகா்ப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே கழிப்பறைகளில் உள்ள தண்ணீா் தொட்டிகளில் தண்ணீா் நிரப்பப்படாமல் உள்ளது. மேலும் குண்டாறு பகுதியில் மின் மோட்டாா் அமைத்து அதிலிருந்து தண்ணீா் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.