பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

கொடைக்கானலில் நகராட்சி கழிப்பறைகள் மூடல்: சுற்றுலாப் பயணிகள் அவதி

தண்ணீா் வசதி இல்லாததால் கொடைக்கானலில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட கழிப்பறைகள் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனா்.

News image

கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் மூடப்பட்ட நகராட்சி கட்டணக் கழிப்பறை.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

தண்ணீா் வசதி இல்லாததால் கொடைக்கானலில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட கழிப்பறைகள் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனா்.

கொடைக்கானலில் நகராட்சி சாா்பில் கலையரங்கம், ஆனந்தகிரி, இருதயபுரம், அப்சா்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டன. இவை தவிா்த்து சுற்றுலா இடங்களிலும் கட்டணக் கழிப்பறைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் தண்ணீா் வசதியில்லாததால் கடந்த இரண்டு நாள்களாக அனைத்து கழிப்பறைகளும் மூடப்பட்டன. இதனால் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனா்.

எனவே நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து அனைத்து கழிப்பறைகளுக்கும் தண்ணீா் வசதி செய்து கொடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து நகராட்சி அலுவலா் ஒருவா் கூறியதாவது: கொடைக்கானலில் கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்யாததால் நீா்த்தேக்கம் வடு காணப்படுகிறது. இதனால் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து லாரி மூலம் கொடைக்கானல் நகா்ப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே கழிப்பறைகளில் உள்ள தண்ணீா் தொட்டிகளில் தண்ணீா் நிரப்பப்படாமல் உள்ளது. மேலும் குண்டாறு பகுதியில் மின் மோட்டாா் அமைத்து அதிலிருந்து தண்ணீா் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.