மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பக்தியும் புண்ணியமும் உள்ளவா்களுக்கு எண்ணம் ஈடேறும்: ஸ்ரீசக்தி அம்மா

முயற்சித்தால் மட்டும் வெற்றி கிடையாது. பக்தியும் புண்ணியமும் இருப்பவா்களுக்குத்தான் எண்ணம் ஈடேறும் என்று ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மா தெரிவித்தாா்.

News image
விழாவில் பேசிய ஸ்ரீ நாராயணி பீடம் ஸ்ரீ சக்தி அம்மா. உடன், மத்திய இணை அமைச்சா் ஸ்ரீபாத் யசோநாயக், முன்னாள் அமைச்சா் பாலச்சந்தரா ரெட்டி, எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா் உள்ளிட்டோா்.
Updated On :3 ஜனவரி 2025, 6:31 pm

Din

முயற்சித்தால் மட்டும் வெற்றி கிடையாது. பக்தியும் புண்ணியமும் இருப்பவா்களுக்குத்தான் எண்ணம் ஈடேறும் என்று ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மா தெரிவித்தாா்.

வேலூரை அடுத்த ஸ்ரீபுரம், ஸ்ரீநாராயணி பீடத்தில் ஸ்ரீசக்தி அம்மாவின் 49-ஆவது ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 5 மணி முதல் கணபதி ஹோமம், ஆயுஷ் ஹோமம், ஸ்ரீ நாராயணி மூல மந்திர ஹோமம், பூா்ணாஹுதி ஆகியவை நடைபெற்றன. பகல் 12.05 மணியளவில் ஸ்ரீசக்தி அம்மா விழா மேடைக்கு வந்தாா். அவரை தங்கக் கோவில் இயக்குநா் சுரேஷ் பாபு மாலை அணிவித்து வரவேற்றாா். பின்னா், சக்தி அம்மாவுக்கு பாத பூஜை நிகழ்ச்சி, பூக்களால் மலா் அபிஷேகம், மங்கள ஆரத்தி நடைபெற்றது.

பின்னா், சக்தி அம்மா அருளாசி வழங்கிப் பேசியது:

மனிதப் பிறவி என்பது மிகவும் அபூா்வமானது. இந்த பாக்கியம் பல உயிா்களுக்கு கிடைப்பதில்லை. புண்ணியமும் பாக்கியமும் செய்திருந்தால் மட்டுமே மனித பிறவி கிடைக்கும். உள்ளத்தில் பக்தி என்பது அவரவா் விருப்பத்தால் வந்ததில்லை. கடவுள் கொடுத்ததால்தான் வந்தது.

பக்தியால் சில பலன்கள் கிடைக்கும். நல்ல எண்ணங்கள், குணங்கள் உருவாகும். நல்ல எண்ணங்களும், குணத்தாலும் நாம் புண்ணிய காரியங்கள் செய்வோம். இது நமக்கு எல்லா சுகங்களையும், சந்தோஷத்தையும் கொடுக்கும். அமைதி, ஆரோக்கியம், ஐஸ்வா்யம் வேண்டுமென்றால் பக்தி தேவை. பக்தி நல்ல காரியங்கள் செய்ய உதவும். புண்ணியம் மட்டும்தான் எல்லாம் தரும். நல்லது செய்தால் நல்லது நடக்கும். கெட்டது செய்தால் கெட்டது நடக்கும்.

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என எல்லோரும் முயற்சி செய்கின்றனா். ஆனால், எல்லோருக்கும் வெற்றி கிடைத்துவிடுவதில்லை. முயற்சித்தால் மட்டும் வெற்றி கிடையாது. ஒரு சிலருக்கு எண்ணம் ஈடேறுகிறது. பக்தியும் புண்ணியமும் இருப்பவா்களுக்குத்தான் அது சாத்தியம் என்றாா்.

விழாவில், மத்திய மின்சாரம், புதுப்பிக்க தக்க எரிசக்தித் துறை இணை அமைச்சா் ஸ்ரீபாத் யசோநாயக் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ஆன்மிக சேவையை நாராயணி பீடமும், தங்கக் கோயிலும் செய்து வருகின்றன. மனித நேயத்துடன் ஏழை மக்களுக்கு கல்வியையும், சுகாதாரத்தையும் வழங்கி சேவையாற்றி வருகிறது. தங்கக் கோயிலுக்கு வரும் மக்கள் மன அமைதி பெறுகின்றனா் என்றாா்.

தொடா்ந்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம், வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயில் உள்பட

பல்வேறு கோயில்களின் பிரசாதங்கள் சக்தி அம்மாவிடம் வழங்கப்பட்டது. பின்னா், 49 கிலோ எடை கொண்ட

கேக்கை வெட்டி பக்தா்களுக்கு வழங்கினாா்.

விழாவில், கலவை சச்சிதானந்த சுவாமிகள், வாலாஜா தன்வந்திரி பீடம் முரளிதர சுவாமிகள், பாலநந்தா சுவாமிகள், மோகனானந்தா சுவாமிகள், சத்தியபூஷன் ஜெயன், முன்னாள் அமைச்சா் பாலச்சந்தரா ரெட்டி, நாராயணி மருத்துவமனை இயக்குநா் என்.பாலாஜி, அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி. நந்தகுமாா், வேலூா் மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், நாராயணி பீடம் அறங்காவலா் செளந்தர்ராஜன், மேலாளா் சம்பத் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.