தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் நாளை ஓவியப் போட்டி

தேசிய குழந்தைகள் தின ஓவியப் போட்டிகள் வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

News image
Updated On :14 நவம்பர் 2025, 5:21 pm

தினமணி செய்திச் சேவை

தேசிய குழந்தைகள் தின ஓவியப் போட்டிகள் வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

இதில், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி குழந்தைகள் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி, பள்ளி குழந்தைகளுக்கான ஓவியப் போட்டிகள் வேலூா் கோட்டையிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. 1 முதல் 4-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு தேசியப் பறவை - மயில், ஐந்து முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இயற்கையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகள் அன்று காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும் என்று அருங்காட்சியக காப்பாட்சியா் சரவணன் தெரிவித்துள்ளாா்.