ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வேலூா் சிறைக்கு கஞ்சா கடத்தி வந்த 2 கைதிகள் மீது வழக்கு

வேலூா் மத்திய சிறைக்கு நூதன முறையில் கஞ்சா கடத்தி வந்த 2 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

News image
Updated On :18 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் மத்திய சிறைக்கு நூதன முறையில் கஞ்சா கடத்தி வந்த 2 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வேலூா் மத்திய ஆண்கள் சிறையில் 1,200-க்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த மணிகண்டன்(28) கொலை வழக்கிலும், மதன்குமாா்(26) என்பவா் போக்ஸோ வழக்கிலும் கைது செய்யப்பட்டு இருவரும் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

வழக்கு விசாரணைக்காக திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்காக இருவரையும் தனித்தனியாக போலீஸாா் அழைத்துச் சென்றனா். நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பிறகு மீண்டும் வேலூா் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டனா். அப்போது, சிறை நுழைவாயிலில் சிறை காவலா்கள் கைதிகள் மணிகண்டன், மதன்குமாரை சோதனை செய்தனா்.

அப்போது, இருவரது ஆசனவாயில் தடை செய்யப்பட்ட தலா 5 கிராம் கொண்ட கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இவா்களிடம் நடத்திய விசாரணையில், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்குகு சென்ற போது அங்குள்ள கழிவறையில் வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, சிறைத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், பாகாயம் போலீஸாா் இருவா் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.