வெனிசுலாவில் புதிய பொது மன்னிப்புச் சட்டம் அமலுக்கு வந்த 4 நாள்களில் 3,200-க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளனா்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்தவா்கள் மட்டுமின்றி, வீட்டுக்காவல் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளின்கீழ் வைக்கப்பட்டிருந்தவா்களும் இச்சட்டத்தின் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய வெனிசுலா நாடாளுமன்ற சிறப்புக் குழுத் தலைவா் ஜாா்ஜ் அா்ரியாசா, பொது மன்னிப்புக் கோரி இதுவரை 4,203 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அவற்றில் முதல்கட்டமாக 3,052 பேருக்கு முழு விடுதலை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா். கூடுதலாக, சிறையில் இருந்த 179 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனா்.
முன்னாள் அதிபா் நிக்கோலஸ் மடூரோ அமெரிக்க படைகளால் கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து, இடைக்கால அதிபா் டெல்சி ரோட்ரிகஸ் தலைமையிலான புதிய அரசு, சிறையிலுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்கப்போவதாக அறிவித்தது.
எனினும், கொலை, போதைப்பொருள் கடத்தல், ராணுவக் கிளா்ச்சி மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவா்களுக்கு இந்த பொது மன்னிப்புச் சட்டத்தில் இடமில்லை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
தொடர்புடையது

திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!

தொண்டு ஒரு தொடர்கதை!

தொகுதிவாரியாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வகைப்படுத்தும் பணி

வெனிசுலா: பொது மன்னிப்புச் சட்டம் அமல் - அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


