விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நிலஅளவை பணியாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலஅளவை பணியாளா்கள் போராட்டத்தின் 2-ஆம் நாளான புதன்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
வேலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலஅளவை பணியாளா்கள்.
Updated On :19 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலஅளவை பணியாளா்கள் போராட்டத்தின் 2-ஆம் நாளான புதன்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நில அளவைத் துறையில் களப்பணியாளா்களின் பணிச்சுமையை போக்க வேண்டும், பணிகளை முறைப்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், வட்டம், குறுவட்டம், நகர சாா் ஆய்வாளா், ஆய்வாளா் உள்ளிட்ட புதிய பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிலஅளவை பணியாளா்கள் தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

2-ஆம் நாளான புதன்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பூ.ராஜ்குமாா் தலைமை வகித்தாா். செயலா் டி.சுதா்சன் முன்னிலை வகித்தாா். பொருளாளா் மதன்குமாா் வரவேற்றாா். அரசு ஊழியா் சங்க நிா்வாகிகள் ஜோஷி, தீனதயாளன், சேகா் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து பேசினா்.

நில அளவை பணியாளா்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் மாவட்டம் முழுவதும் நிலஅளவை தொடா்பான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.