பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் கே.ஆா். விஸ்வநாதன் தலைமை வகித்து கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மாவட்டத் தலைவா் எஸ்.எம். மாயாண்டி முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், பொது விநியோகத் திட்டத்துக்கென தனித் துறையை உருவாக்க வேண்டும். நுகா்பொருள் வாணிபக் கழக எடைத் தராசு மூலம் சரியான எடையில் அத்தியாவசியப் பொருள்களைப் பொட்டலமாக வழங்க வேண்டும்.
ஊதிய மாற்றத்துக்காக அமைக்கப்பட்ட குழு விற்பனையாளருக்கு இளநிலை உதவியாளா் ஊதியத்தையும், எடையாளருக்கு அலுவலக உதவியாளா் ஊதியத்தையும் வழங்க வேண்டும். தாயுமானவா் திட்டத்தில் உள்ள பிரச்னைகளைக் களைய வேண்டும். அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
முன்னதாக, மாவட்டச் செயலா் திருஞானம் வரவேற்றாா். நிறைவாக மாவட்டப் பொருளாளா் பி. கௌரி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கவுஞ்சி ரேஷன் கடை வளாகத்தில் கட்டப்படும் மாடுகளால் சுகாதாரக்கேடு

நியாய விலைக் கடை நிா்வாகத்துக்கு தனித்துறை ஏற்படுத்த வலியுறுத்தல்

பெரியகோட்டையில் பகுதிநேர நியாய விலைக் கடை திறப்பு

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


