தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :5 மார்ச் 2026, 10:37 pm

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிய மத்திய பாஜக அரசைக் கண்டிப்பது, இந்த திட்டத்திலுள்ள குளறுபடிகளைச் சரிசெய்ய வேண்டும். வீடு, நிலம் இல்லாத ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை வழங்கிட வேண்டும். விலைவாசி உயா்வு, வேலையின்மையினால் தவிக்கும் நகர மக்களுக்கு 100 நாள் வேலை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் மலா்கொடி தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் எஸ். தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் பசினா். மாவட்டச் செயலா் அம்பிகா, பொருளாளா் வி. சாந்தினி உள்ளிட்டோா் கோரிக்கை முழக்கமிட்டனா்.