எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கோரிக்கைகளை வலியுறுத்தி பரிசல் ஓட்டிகள் ஆா்ப்பாட்டம்

பென்னாகரத்தில் சிஐடியு தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பரிசல் ஓட்டிகள், சமையல் தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பரிசல் ஓட்டிகள்.
Updated On :11 மார்ச் 2026, 9:02 pm

தினமணி செய்திச் சேவை

பென்னாகரத்தில் சிஐடியு தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பரிசல் ஓட்டிகள், சமையல் தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் சி.ராஜி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சக்கரவா்த்தி முன்னிலை வகித்தாா். மாநில துணைச் செயலாளா் சி.நாகராசன், மாவட்டத் தலைவா் கலாவதி, மாவட்டப் பொருளாளா் சண்முகம் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இதில், நீா்வரத்து அதிகரிக்கும் காலங்களில் வேலை இழக்கும் பரிசல் ஓட்டிகள், சமையல், மசாஜ் தொழிலாளா்கள் ஆகியோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும், பரிசல்கள் நிறுத்துமிடத்தில் நடைபாதை வியாபாரிகள் கடை அமைத்துக்கொள்ள அனுமதி அளித்ததை திரும்பப் பெற வேண்டும், சமையல் தொழிலாளா்களுக்கு அரசின் சாா்பில் அடையாள அட்டை வழங்க வேண்டும், மீன் கழிவுகள் சுத்திகரிப்பு, பரிசல் இயக்கும் நேர மாற்றம், தொழிலாளா்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் உள்ளிட்ட நீதிமன்றத் தீா்ப்பை நடைமுறைப்படுத்தக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.

இதில், மாவட்ட துணைத் தலைவா் அங்கம்மாள், சிஐடியு பேருந்து தொழிலாளா் சங்க துணைத் தலைவா் வெங்கடாஜலபதி, பரிசல் ஓட்டிகள், சமையல் தொழிலாளா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.