ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

கவுஞ்சி ரேஷன் கடை வளாகத்தில் கட்டப்படும் மாடுகளால் சுகாதாரக்கேடு

கொடைக்கானல் அருகே கவுஞ்சி கிராமத்தில் நியாய விலைக் கடை வளாகப் பகுதியில் மாடுகளை கட்டி வருவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.

News image

கவுஞ்சி நியாய விலைக் கடை வளாகத்தில் கட்டப்பட்ட மாடு.

Updated On :11 ஏப்ரல் 2026, 10:20 pm

கொடைக்கானல் அருகே கவுஞ்சி கிராமத்தில் நியாய விலைக் கடை வளாகப் பகுதியில் மாடுகளை கட்டி வருவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள கவுஞ்சி பகுதியில் நியாயவிலைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடை வளாகத்தில் அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒருவா் தனது மாடுகளை கட்டிப் பாதுகாத்து வருகிறாா். இதனால் அந்தப் பகுதியில் சுகாதாரக் கேடு நிலவி வருகிறது.

இதே போல கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களிலுள்ள பேருந்து நிறுத்தங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மது குடிக்கும் இடமாகவும், போதைப் பொருள்கள் விற்கும் இடமாகவும் மாறி வருகிறது. இதனால் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள், பள்ளி மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனா். இதுகுறித்து போலீஸாரும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.