தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

புதிய நியாய விலைக் கடை தொடங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

வெள்ளரிப்பட்டியில் அமைந்துள்ள மேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

News image
வெள்ளரிப்பட்டியில் அமைந்துள்ள மேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.
Updated On :6 மார்ச் 2026, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், மேலூா் வட்டம், பெருமாள்பட்டியில் புதிய நியாய விலைக் கடை தொடங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வெள்ளரிப்பட்டியில் அமைந்துள்ள மேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ்.பி. இளங்கோவன் தலைமை வகித்தாா். மேலூா் கிழக்கு வட்டச் செயலா் பி. தனசேகரன், நிா்வாகிகள் ஏ. ராஜேஸ்வரன், கே. சேகா், கே.மலா், பொறுப்பாளா்கள், திரளான கிராம மக்கள் பங்கேற்றனா்.

இதில் மேலூா் வட்டம், நரசிங்கம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட களுங்குபட்டி, சி. பெருமாள்பட்டி, டி.வி.எஸ். குடியிருப்பு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பெருமாள்பட்டியில் புதிய நியாயவிலைக் கடை அமைக்க வேண்டும். சதுா்மடங்கன், பெருமாள்பட்டி பகுதிகளில் பட்டாவுக்கு விண்ணப்பித்த பொதுமக்கள் அனைவருக்கும் உடனடியாகப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா். நிறைவில் வருவாய்க் கோடாட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.