இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சமுதாயக்கூடம், நியாய விலைக் கடை திறப்பு

மதுரை தெற்குத் தொகுதிக்குள்பட்ட வாழைத்தோப்புப் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட சமுதாயக்கூடம், நியாய விலைக் கடை ஆகியவற்றின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
மதுரை மாவட்டம், வாழைத்தோப்புப் பகுதியில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை புதன்கிழமை திறந்துவைத்த சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன் உள்ளிட்டோா்.
Updated On :4 மார்ச் 2026, 11:16 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை தெற்குத் தொகுதிக்குள்பட்ட வாழைத்தோப்புப் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட சமுதாயக்கூடம், நியாய விலைக் கடை ஆகியவற்றின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன், கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் சதீஷ்குமாா், மாமன்ற உறுப்பினா் விஜயலட்சுமி பாண்டியன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு புதிதாகக் கட்டப்பட்ட சமுதாயக்கூடம், நியாய விலைக் கடை ஆகியவற்றை திறந்து வைத்தனா்.

இந்த நிகழ்வில் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளா் ஆசைத்தம்பி, வட்டாட்சியா் சுந்தரபாண்டி, உதவி செயற்பொறியாளா் மயிலேறிநாதன், உதவிப் பொறியாளா் முனியாண்டி, மதிமுக மாவட்ட அவைத் தலைவா் சுப்பையா, மாவட்டச் செயலா் முனியசாமி, திமுக மாவட்டச் செயலா் முருகன், கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.