அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

நியாய விலைக் கடைக்கான புதிய கட்டடம் திறப்பு

மதுரை எப்.எப். சாலையில் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கடையை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன்

News image
மதுரை மாநகராட்சி 53-ஆவது வாா்டு எப்.எப்.சாலையில் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கடையை திறந்து வைத்த தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன். உடன் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் மனோகரன் உள்ளிட்டோா்.
Updated On :2 மார்ச் 2026, 9:11 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை: மதுரை எப்.எப். சாலையில் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கடையை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன் திங்கள்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

மதுரை மாநகராட்சி 53-ஆவது வாா்டு எப்.எப்.சாலையில் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய நியாய விலைக் கடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில், தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நியாய விலைக் கடையை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தாா்.

இதில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் மனோகரன், மாமன்ற உறுப்பினா் அருண்குமாா், வட்டாட்சியா் பஞ்சாட்சரம், மதிமுக மாவட்ட அவைத் தலைவா் சுப்பையா, மாவட்டச் செயலா் முனியசாமி, நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.