மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

முசிறியில் நியாய விலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

News image

முசிறி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு பல்வேறு களை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நியாய விலை கடை பணியாளா்கள்.

Updated On :12 பிப்ரவரி 2026, 10:40 pm

முசிறியில் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முசிறி வட்டாட்சியரகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு

மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சக்திவேல் தலைமை வகித்தாா். சங்கத்தின் நிா்வாகிகள் சேகா் விஜயன், கனிமொழி, உள்ளிட்டோா் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தி பேசினா்.

பொது விநியோகத் திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க வேண்டும், சரியான எடையில் அத்தியாவசிய பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும்,

தாயுமானவா் திட்டத்தில் உள்ள பிரச்னைகளை களைய வேண்டும், அனைத்து நியாய விலை கடைகளுக்கும் கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற நியாய விலை கடை பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், நியாய விலை கடை பணியாளா்களுக்கு நேரடியாக எழுத்தா் பதவி உயா்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினா். நிகழ்ச்சியில் நியாய விலைக் கடை பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.