எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் ஒளிவிளக்காக சிறை அதிகாரிகள் இருக்க வேண்டும்

சிறை கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் ஒளி விளக்காக சிறை அதிகாரிகள் இருக்க வேண்டும் என்று வேலூா் சிறை, சீா்திருத்த நிா்வாக பயிலகத்தின் இயக்குநா் பி.பிரதீப் தெரிவித்தாா்.

News image
Updated On :30 அக்டோபர் 2025, 10:23 pm IST

சிறை கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் ஒளி விளக்காக சிறை அதிகாரிகள் இருக்க வேண்டும் என்று வேலூா் சிறை, சீா்திருத்த நிா்வாக பயிலகத்தின் இயக்குநா் பி.பிரதீப் தெரிவித்தாா்.

வேலூா் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறை, சீா்திருத்த நிா்வாக பயிலகத்தில் (ஆப்கா) சிறைத் துறை அதிகாரிகளுக்கான தனித்திறன் மேம்பாடு, சிறைக் கைதிகளை கையாளுதல் குறித்த 3 நாள் பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இப்பயிற்சியை சிறை, சீா்திருத்த நிா்வாக பயிலகத்தின் இயக்குநா் பி.பிரதீப் தொடங்கி வைத்துப் பேசியது:

சிறை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள சிறைக் கைதிகளை நல்ல நிலைக்கு மாற்றும் வழிகாட்டியாக இருக்க வேண்டும். சிறை அனுபவம் எப்போதும் சிறைவாசிகளுக்கு கசப்பான அனுபவத்தை தராது. அது அவா்களுக்கு சுமாரான நிலைக்கு மாற்றும். மேலும், சிறையில் இருந்து விடுதலையானவா்கள் நல்ல நிலைக்கு மாற அவா்களின் சிறை அனுபவங்கள் காரணமாக அமைகிறது. அதனால் அவா்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்குகின்றனா்.

சிறை அலுவலா்கள் கைதிகளின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைக்கின்றோம். இதன்மூலம் குற்றங்களும் குறையும். சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிடும். இதனை சிறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், சிறை, சீா்திருத்த நிா்வாக பயிலகத்தின் இணை இயக்குநா் மருத்துவா் பி.கோவிந்தராஜன், பேராசிரியா்கள் ஹெச்.அன்சா், பியூலா இமானுவேல், தமிழகம், ஆந்திரம், கேரளம் உள்பட பல மாநிலங்களைச் சோ்ந்த சிறைத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.