கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஒபெக் நிதியின் கீழ் வேலை வாய்ப்பளிக்கும் பட்டப்படிப்பு!

ஒபெக் நிதியின் கீழ் இளைஞர்களுக்கு பணி வாய்ப்புகளை அளிக்கும் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :9 மார்ச் 2026, 6:28 am

இணையதளச் செய்திப் பிரிவு

சர்வதேச மேம்பாட்டுக்கான ஓபெக் நிதியின் இளம் தொழில்துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இளைஞர்கள் இரண்டாண்டு படிப்புகளை மேற்கொள்ள, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சர்வதேச மேம்பாட்டுக்கான ஓபெக் நிதியின் உறுப்பு நாடுகளிலிருந்து, இளம் தலைமுறையினரை தேர்வு செய்து தொழில் மேம்பாட்டுப் படிப்புகளை அளிக்கும் வகையில் ஒய்பிடிபி என்ற படிப்பானது 2 - 3 ஆண்டுகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க 2026, ஏப்ரல் 11ஆம் தேதி கடைசி நாளாகும்.

விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரி.. https://career2.successfactors.eu/careers?company=opecfundfo

விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.. ஓபெக் நிதியளிக்கும் நாடுகளைச் சேர்ந்தவர்கள். 30 வயதுக்குட்பட்டவர்கள், குறைந்தபட்சம் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கல்வியில் சிறந்த மாணவராக விளங்கியவர், ஆங்கிலத்தில் புலமை கொண்டிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணியனுபவம் கொண்டவராகவும் ஓபெக் நிதி குறித்து நன்கு அறிந்தவராக இருப்பது முக்கியம்.

இதில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு ஓபெக் நிதியமைப்பில் பணி வழங்கப்படுகிறது. விண்ணப்பத்துடன் ஓபெக் நிதி குறித்த கட்டுரையையும் இணைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.