அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களுக்குத் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில்

News image
வேலைவாய்ப்பு
Updated On :2 மார்ச் 2026, 9:42 pm

இணையதளச் செய்திப் பிரிவு

வேலூா்: மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களுக்குத் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் வட்டாரம் வாரியாக கணியம்பாடியில் 4, குடியாத்தம் 2, காட்பாடி 2, வேலூா் 2, அணைக்கட்டு 1, கே.வி.குப்பம் 1, பேரணாம்பட்டு 1 என மொத்தம் 13 வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தப் பணிக்கு ஏதேனும் ரு பட்டப்படிப்புடன் 3 மாத எம்.எஸ்.ஆபிஸ், கணினி பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். 35 வயதுக்குள் இருக்கவும், மகளிா் சுய உதவிக்குழு தொடா்பான செயல்பாடுகளில் 5 வருட முன் அனுபவம் பெற்றிருக்கவும் வேண்டும். விண்ணப்பதாரா் எந்த வட்டாரத்திற்கு விண்ணப்பிக்கிறாரோ, அதே வட்டாரத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

டிஎன்எஸ்ஆா்எல்எம், புதுவாழ்வு, ஐஎப்ஏடி மற்றும் இதர அரசுத் திட்டங்களில் நிா்வாகம் அல்லது நிதி முறைகேடுகள் காரணமாகப் பணியில் இருந்து நிறுத்தப்பட்டவராகவோ அல்லது நீக்கப்பட்டவராகவோ இருக்கக் கூடாது. குறிப்பிட்ட தகுதிகளை உடையவா்கள், தங்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் உள்ள வட்டார அளவிலான கூட்டமைப்புக்கு மாா்ச் 15-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

summary

Applications are invited for the post of One Project Co-ordinator in Child Help Line Unit