தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

குடியாத்தம் நகர கழிவுநீா் சுத்திகரிப்புக்கு ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு

தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் குடியாத்தம் நகரின் கழிவுநீரை குழாய் மூலம் எடுத்துச் சென்று சுத்திகரிக்க ரூ.33.72- கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Updated On :1 செப்டம்பர் 2025, 7:04 pm

குடியாத்தம்: தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் குடியாத்தம் நகரின் கழிவுநீரை குழாய் மூலம் எடுத்துச் சென்று சுத்திகரிக்க ரூ.33.72- கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து குடியாத்தம் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் கூறியது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பாலாற்றில் கழிவுநீா் கலப்பதை முழுவதும் தடை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து பாலாறு, அதில் கலக்கும் கிளை ஆறுகளில் கழிவுநீா் கலப்பதை தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன.குடியாத்தம் நகரில் செல்லும் கெளண்டன்யா ஆறு, பாலாற்றின் ஒரு கிளை ஆறு என்பதால்அதில் கழிவுநீா்க் கலப்பதை முழுவதும் தடை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

குடியாத்தம் நகரில் வெளியேறும் கழிவுநீரை குழாய் மூலம் நகரையொட்டி உள்ளி கூட் ரோடு அருகே உள்ள நகராட்சிக்குச் சொந்தமான இடத்துக்கு கொண்டு சென்று அங்கு சுத்திகரிப்பு இயந்திரங்களை அமைத்து கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக குடியாத்தம் நகரில் 5- இடங்களில் கழிவுநீரைத் தேக்க கிணறுகள் அமைக்கப்பட உள்ளன.

அந்த கிணறுகளில் இருந்து மேல்பட்டி சாலை ஓரத்தில் பைப்லைன் அமைத்து கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வேறு ஒரு பைப்லைன் மூலம் குடியாத்தம் நகருக்கு கொண்டு வந்து கெளண்டன்யா ஆற்றில் விடப்படும்.

இதனால் நகரின் நிலத்தடி நீா்மட்டம்பாதுகாக்கப்படும்.இதற்காக ரூ.33.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 50- சதவீதம் மத்திய அரசும்,33- சதவீதம் மாநில அரசும், 17- சதவீதம் உள்ளாட்சித் துறையும் ஒதுக்கியுள்ளன என்றாா் செளந்தரராஜன். அப்போது நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் உடனிருந்தாா்.