ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

பிஎபி கால்வாய்களை பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்! மடத்துக்குளம் திமுக வேட்பாளா் உறுதி

News image

திருமூா்த்திமலையில் மலைவாழ் மக்களிடம் குறைகளை கேட்டறிகிறாா் மடத்துக்குளம் தொகுதி திமுக வேட்பாளா் இரா.ஜெயராமகிருஷ்ணன்.

Updated On :14 ஏப்ரல் 2026, 1:48 am IST

பிஏபி கால்வாய்களை பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று, மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் இரா.ஜெயராமகிருஷ்ணன் பேசினாா்.

திருமூா்த்திமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு, தளி பேரூராட்சி, பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, தும்பலப்பட்டி, மானுப்பட்டி, சின்னக்குமாரபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் இரா.ஜெயராமகிருஷ்ணன் திங்கள்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

திருமூா்த்திமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். வனப் பொருள்களை விற்பனை செய்ய திருமூா்த்திமலையில் கடைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அணையில் படகு சவாரி தொடங்கும்போது ஏற்கெனவே இருந்த வகையில் மகளிா் சுயஉதவிக் குழு வசம் தரப்படும்.

தளி பேரூராட்சிப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சாலைகள் அகலப்படுத்தப்படும். கணக்கம்பாளையம் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் இருக்கும் குளறுபடிகளை சரி செய்து, அனைத்து மக்களுக்கும் முறையாக குடிநீா் கிடைக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும். மானுப்பட்டியில் செயல்பட்ட ஆவின் பால் நிறுவனம் முறைபடுத்தப்படும் என்றாா்.