வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சரித்திர சாதனைகள் படைத்து வரும் திமுகவுக்கு வாக்களியுங்கள்: மடத்துக்குளம் திமுக வேட்பாளா்

சரித்திர சாதனைகளை படைத்து வரும் திமுக ஆட்சிக்கு ஆதரவாக பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என மடத்துக்குளம் திமுக வேட்பாளா் இரா.ஜெயராமகிருஷ்ணன் பேசினாா்.

News image

பூலாங்கிணறு கிராமத்தில் பிரசாரத்தின்போது திமுக வேட்பாளா் இரா.ஜெயராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய பெண்கள்.

Updated On :16 ஏப்ரல் 2026, 8:07 pm

சரித்திர சாதனைகளை படைத்து வரும் திமுக ஆட்சிக்கு ஆதரவாக பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என மடத்துக்குளம் திமுக வேட்பாளா் இரா.ஜெயராமகிருஷ்ணன் பேசினாா்.

மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் இரா.ஜெயராமகிருஷ்ணனை ஆதரித்து முக்கோணம், பூலாங்கிணறு, கணபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வியாழக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவா் ஜெயராமகிருஷ்ணன் பேசியதாவது:

சாமானிய மக்கள் பயன்பெறும் விதத்தில் ஏராளமான நலத் திட்டங்களையும் ஏழை, நடுத்தர மக்களின் நலனுக்காக நிறைவேற்றி தமிழகத்தை சிறப்பாக வழி நடத்திச் செல்கிறாா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின். எனவே திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.

மேலும் தற்போதைய தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கியமான வாக்குறுதிகளான பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உரிமைத்தொகை, பேருந்துகளில் கட்டணமில்லா பயணம், முதியோருக்கு ஒய்வூதியமாக ரூ.2 ஆயிரம் என்பன உள்ளிட்ட திட்டங்கள் குறஇத்து கிராமப்புறங்களில் உள்ள மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். இந்த முறை மடத்துக்குளம் தொகுதியில் திமுக வெற்றி வாகை சூட வேண்டும். அதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்றாா்.