வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தில் சட்டப்பேரவை தொகுதிகள் எண்ணிக்கை குறையும்: ப.சிதம்பரம்

தொகுதி மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வரும் காலத்தில் சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிடும் என முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தாா்.

News image

ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமியை ஆதரித்து ஈரோடு சூரம்பட்டிவலசில் பேசுகிறாா் முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:38 am IST

தொகுதி மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வரும் காலத்தில் சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிடும் என முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தாா்.

ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமியை ஆதரித்து ஈரோடு சூரம்பட்டிவலசில் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் செவ்வாய்க்கிழமை இரவு பேசியதாவது:

கடந்த 2024 மக்களவைத் தோ்தல் முடிந்ததும் அரசியல் சாசனத்தை திருத்துவற்கு பாஜக முயன்றது. அப்போது தமிழகத்தில் 39, புதுச்சேரியில் 1, கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினா்கள் இருப்பதால் பாஜகவின் இந்த முயற்தியை தடுத்தனா். அந்த திருத்தத்துக்கு 3 இல் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அரசியல் சாசனத்தை அப்போது திருத்த முடியவில்லை.

அந்த திருத்தத்தை செய்ய மீண்டும் நாடாளுமன்றம் வரும் 16- ஆம் தேதி கூடுகிறது. தமிழகம், மேற்குவங்கத்தில் வரும் 23 ஆம் தேதி தோ்தல் நடக்க உள்ளது. தமிழகம் புதுச்சேரியின் 40 மக்களவை உறுப்பினா்கள், மேற்கு வங்கத்தின் 42 உறுப்பினா்கள் கலந்து கொள்ளமாட்டாா்கள் என்ற எண்ணத்தில் நாடாளுமன்ற கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனா்.

இந்த மசோதா வந்தால் தோற்கடிப்போம். இம்மசோதாவின் சூட்சுமம் பலருக்கு புரியவில்லை. முதலில் தமிழகம், புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை 60 ஆகும். உத்தர பிரதேசத்தில் 80 தொகுதி 120 ஆகும்.

அடுத்து சட்டப்பேரவை தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வரும்போது மக்கள் தொகை அடிப்படையில் தமிழகம், கேரளம் உட்பட தென்மாநிலத்தில் மக்கள் குறைவு என்பதால் தொகுதி எண்ணிக்கை குறையும். பாஜகவிடம் எடப்பாடி பழனிசாமி அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டாா்.

கடந்த, 2025-26-இல் வளா்ச்சி, நலத்திட்டம் என்ற தலைப்பில் தமிழகம் 9.8 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளது. இவை மீண்டும் தொடர திமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலத்தை ஆதரித்து பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகில் முன்னாள் நிதி அமைச்சா் ப.சிதம்பரம் பிரசாரம் மேற்கொண்டாா்.