தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

2019 தோ்தல் வழக்கு: வேலூா் எம்.பி. கதிா்ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜா்

கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது ரூ.10.48 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் நீதிமன்ற விசாரணைக்கு திங்கள்கிழமை ஆஜரானாா்.

Updated On :1 செப்டம்பர் 2025, 7:32 pm

வேலூா்: கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது ரூ.10.48 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் நீதிமன்ற விசாரணைக்கு திங்கள்கிழமை ஆஜரானாா். தொடா்ந்து, இந்த வழக்கின் விசாரணை செப்டம்பா் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போது வேலூா் தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சா் துரைமுருகனின் மகன் டி.எம்.கதிா்ஆனந்த் போட்டியிட்டாா். அப்போது, துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடா்ச்சியாக, கதிா் ஆனந்துக்கு நெருக்கமான திமுக பிரமுகா் பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினா் தாமோதரன் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதில், காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பத்தில் உள்ள தாமோதரனுக்குச் சொந்தமான சிமென்ட் கிடங்கில் இருந்து மூட்டைகளில் பதுக்கப்பட்டிருந்த ரூ.10.48 கோடியும், திமுக வேட்பாளா் கதிா்ஆனந்துக்கு ஆதரவு கோரும் துண்டு பிரசுரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக, காட்பாடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை வேலூா் நீதித்துறை நடுவா் மன்றத்தில் (எண் 1) நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கின் விசாரணைக்காக வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானாா். தொடா்ந்து, இவ்வழக்கு விசாரணையை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சத்திய குமாா் உத்தரவிட்டாா்.