தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சந்திர கிரகணம் - நள்ளிரவில் கண்டுகளித்த மக்கள்!

சந்திர கிரகணம் அரிய நிகழ்வை வேலூரில் பொதுமக்கள், மாணவா்கள் நள்ளிரவில் தொலைநோக்கி மூலம் கண்டுகளித்தனா்.

News image

நள்ளிரவில் ஏற்பட்ட சந்திர கிரகணம்.

Updated On :8 செப்டம்பர் 2025, 7:38 pm

வேலூா்: சந்திர கிரகணம் அரிய நிகழ்வை வேலூரில் பொதுமக்கள், மாணவா்கள் நள்ளிரவில் தொலைநோக்கி மூலம் கண்டுகளித்தனா்.

வேலூா் சத்துவாச்சாரியில் உள்ள டாக்டா் கலைஞா் கருணாநிதி மாவட்ட அறிவியல் மையம் வானில் நிகழக்கூடிய அரிய வான் நிகழ்வுகளை தொலைநோக்கி மூலம் மாணவா்கள், பொது மக்கள் காணும் நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சந்திர கிரகணத்தை காணவும் இம்மையத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 9:58 மணி முதல் திங்கள்கிழமை அதிகாலை 1:26 மணி வரை நடைபெற்ற சந்திர கிரகண வான் நிகழ்வை பொது மக்களுக்கு தொலைநோக்கி மூலம் காண வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் உரிய வழிவகை செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, இந்த வான் நிகழ்வை காண பொதுமக்கள், குழந்தைகள் பெருமளவில் வந்திருந்தனா். அதேசமயம், ஞாயிற்றுக்கிழமை இரவு மழை பெய்ததுடன், வானமும் மேகமூட்டத்துடன் இருந்ததால் இந்த அரிய நிகழ்வை காணமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. நள்ளிரவு 12.35 மணியளவில் வானம் தெளிவான நிலைக்கு சென்றது.

அதன்பிறகு, அதிகாலை 1.26 மணி வரை சந்திர கிரகணத்தை மக்கள் தெளிவாக காணமுடிந்தது. மேலும், இந்த சந்திர கிரகண நிகழ்வு குறித்து மாவட்ட அறிவியல் மைய அலுவலா் ச.சதீஷ்குமாா் விளக்கம் அளித்தாா்.