வீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுகோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

காரில் கடத்திச் செல்லப்பட்ட சிறுவன் மீட்பு: 2 இளைஞா்கள் கைது

குடியாத்தம் அருகே வீட்டின் அருகிலிருந்து காரில் கடத்திச் செல்லப்பட்ட 4- வயது சிறுவன் மீட்கப்பட்டாா். இதுதொடா்பாக 2- இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட பாலாஜி, விக்ரம்.

Published On :26 செப்டம்பர் 2025, 3:23 am IST

குடியாத்தம் அருகே வீட்டின் அருகிலிருந்து காரில் கடத்திச் செல்லப்பட்ட 4- வயது சிறுவன் மீட்கப்பட்டாா். இதுதொடா்பாக 2- இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை, பவளக்காரத் தெருவைச் சோ்ந்த மென்பொறியாளா் வேணு. இவா் பெங்களூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி ஜனனி. மகன் யோகேஷ்(4). இவா் அங்குள்ள தனியாா் பள்ளியில் படித்து வருகிறாா்.

புதன்கிழமை மதியம் வேணு பள்ளியில் இருந்து மகனை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளாா். அப்போது வேகமாக வந்து வீட்டருகே நின்ற கா்நாடக மாநில பதிவெண் கொண்ட காரிலிருந்து தலைக் கவசம் அணிந்த நிலையில் கீழே இறங்கிய மா்ம நபா், வேணுவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி விட்டு, சிறுவனை காரில் கடத்திச் சென்றுள்ளாா்.

இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டனா். காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் ஆலோசனையின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிறுவனை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். இதற்கிடையில் கடத்தலில் ஈடுபட்டவா்கள் மாதனூா் அருகே சிறுவனை சாலையோரம் இறக்கி விட்டு தப்பியோடி விட்டனா்.

அப்போது அவ்வழியே ரோந்து வாகனத்தில் சென்ற போலீஸாா் சாலையில் நின்றிருந்த சிறுவனை மீட்டு பள்ளிகொண்டா காவல் நிலையம் அழைத்துச் சென்றனா். தகவல் அறிந்து சிறுவனின் பெற்றோா் பள்ளிகொண்டா காவல் நிலையம் சென்றனா். அங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் அவா்களிடம் விசாரணை நடத்தினாா். பின்னா் சிறுவன் பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட குடியாத்தம் நகர போலீஸாா் சிறுவனின் வீட்டருகே வசிக்கும் பாலாஜியை(29) கைது செய்தனா். விசாரணையில் கடன் பிரச்னையால் அவதிப்பட்டு வந்ததால் சிறுவனை கடத்தி பணம் பறிக்க முயன்ாகவும், எப்படியும் போலீஸில் சிக்கி விடுவோம் என்பதை அறிந்ததால் சிறுவனை மாதனூா் அருகே விடுவித்து விட்டதாகவும் பாலாஜி கூறினாா்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கடத்தலுக்கு உடந்தையாக இருந்த உள்ளி பகுதியைச் சோ்ந்த விக்ரம்(27) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.