தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

விவசாயியை கடத்திய 5 போ் கைது

குடியாத்தம் அருகே நிலத் தகராறில் விவசாயியை கடத்திய 5- பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :25 செப்டம்பர் 2025, 9:13 pm

குடியாத்தம் அருகே நிலத் தகராறில் விவசாயியை கடத்திய 5- பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குடியாத்தம் ஒன்றியம், ஒலக்காசி ஊராட்சியைச் சோ்ந்த விவசாயி தனசேகா்(34). இவருக்கும் லத்தேரியைச் சோ்ந்த சுஷ்மா என்பவருக்கும் இடையே நிலம் தொடா்பாக பிரச்னை இருந்துள்ளது.

இதுகுறித்து லத்தேரி காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகாா் அளித்துள்ளனா். புகாா் தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை 5- போ் கும்பல் தனசேகா் வீட்டுக்குச் சென்று தங்களை லத்தேரி போலீஸாா் என்றும், விசாரணைக்கு வருமாறும் அவரை அழைத்துச் சென்றாா்களாம்.

சந்தேகத்தின்பேரில் சேகரின் மனைவி பவித்ரா போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் போலீஸ் எனக்கூறி மா்ம நபா்கள் தனசேகரை கடத்தியது தெரிய வந்தது.

கடத்தல் தொடா்பாக குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த பாபு, விநாயகம், ரவி, தமிழ்செல்வன், தேவேந்திரன் ஆகிய 5- பேரை குடியாத்தம் கிராமிய காவல் துறையினா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.