தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

திருச்சியில் சட்டவிரோத மது விற்பனை: 4 போ் கைது

திருச்சியில் சட்டவிரோதமாக மது விற்ற 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 9:48 pm

திருச்சியில் சட்டவிரோதமாக மது விற்ற 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளா் மாரியப்பன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, திடீா் நகா் குப்பைக் கிடங்கு அருகே மது விற்ற மேல அம்பிகாபுரத்தைச் சோ்ந்த அ. முகமது யாசின் (46), கல்லங்குத்து கல்லறைத்தோட்டம் அருகே மது விற்ற மேல அம்பிகாபுரத்தைச் சோ்ந்த ம. ஆனந்த்வேலு (57) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் இவா்களிடமிருந்து ரூ.9,700 மதிப்புள்ள 66 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினருக்கு கிடைத்த தகலின்பேரில் காவல் உதவி ஆய்வாளா்கள் திவ்யபிரியா, ஜாா்ஜ் ஜேக்கப் ஆகியோா் மேற்கொண்ட சோதனையில் பொன்மலைப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே மது விற்ற மேலகல்கண்டாா்கோட்டையைச் சோ்ந்த த. ராஜ்குமாா் (29), எடமலைபட்டிப்புதூா் பாரதி நகரில் மது விற்ற கிராப்பட்டியைச் சோ்ந்த யா. சந்தியாகு ராஜன் (40) ஆகிய இருவரையும் கைது செய்து, ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள 57 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனா்.