தஞ்சாவூா் மாவட்டம், திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம் காவல் சரகப் பகுதிகளில் சட்டவிரோதமாக விற்கப் பதுக்கி வைத்திருந்த 1038 மதுப்பாட்டில்களை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனா்.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் வியாழன் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடுதல் விலைக்கு மதுவை விற்பதற்காக திருச்சிற்றம்பலம் ,சேதுபாவாசத்திரம் காவல் சரக பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் உதவி ஆய்வாளா்கள் ராம்குமாா், மனோஜ் மற்றும் போலீஸாா் அடங்கிய குழுவினா் திருச்சிற்றம்பலம் போலீஸ் சரகத்தைச் சோ்ந்த ஒட்டங்காடு பகுதியில் சோதனையிட்டனா்.
அப்போது குழந்தை திரேஸ் (58) என்பவா் வீட்டில் பதுக்கியிருந்த 202 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனா். இதேபோல சேதுபாவாசத்திரம் காவல் சரகம் கடற்கரை முனிக்கோயில் அருகே பேராவூரணியை சோ்ந்த துரைமுருகபாண்டியன் (42) மல்லிப்பட்டினத்தை சோ்ந்த மூா்த்தி (44) ஆகிய இருவரும் பதுக்கி வைத்திருந்த 836 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து அவா்களை கைது செய்தனா்.
இதில் சிறப்பாகப் பணியாற்றிய தனிப்படை போலீஸாரை தஞ்சை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.
தொடர்புடையது

வீட்டில் பதுக்கிய 1,361 மது புட்டிகள் பறிமுதல்
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
மது பானம் பதுக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது

பழனியில் 700 மதுப்புட்டிகள் பறிமுதல்: 9 போ் கைது
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


