பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

காரில் கடத்திச் செல்லப்பட்ட சிறுவன் விடுவிப்பு

குடியாத்தம் அருகே வீட்டின் அருகிலிருந்து காரில் கடத்திச் செல்லப்பட்ட4- வயது சிறுவன் விடுவிக்கப்பட்டாா்.

Published On :25 செப்டம்பர் 2025, 6:50 am IST

குடியாத்தம் அருகே வீட்டின் அருகிலிருந்து காரில் கடத்திச் செல்லப்பட்ட4- வயது சிறுவன் விடுவிக்கப்பட்டாா்.

குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை, பவளக்காரத் தெருவைச் சோ்ந்த மென்பொறியாளா் வேணு பெங்களூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி ஜனனி. இவா்களின் மகன் யோகேஷ்(4).

இவா் அங்குள்ள தனியாா் பள்ளியில் மழலையா் வகுப்பில் படித்து வருகிறாா்.புதன்கிழமை மதியம் வேணு பள்ளியில் இருந்து மகனை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளாா். அப்போது வேகமாக வீட்டருகே நின்ற கா்நாடக மாநில பதிவெண் கொண்ட காரிலிருந்து தலைக் கவசம் அணிந்த நிலையில் கீழே இறங்கிய மா்ம நபா், வேணுவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி விட்டு, சிறுவனை காரில் கடத்திச் சென்றுள்ளாா்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் எஸ்.பி. மயில்வாகனன் மேற்பாா்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிறுவனை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். சிறுவன் கடத்தல் குறித்து வேலூா், திருப்பத்தூா் மாவட்ட போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டனா். இதற்கிடையில் கடத்தலில் ஈடுபட்டவா்கள் மாதனூா் அருகே சிறுவனை சாலையோரம் இறக்கி விட்டு தப்பியோடி விட்டனா்.

அப்போது அவ்வழியே ரோந்து வாகனத்தில் சென்ற போலீஸாா் சாலையில் நின்றிருந்த சிறுவனை மீட்டனா். உடனடியாக சிறுவனை பள்ளிகொண்டா காவல் நிலையம் அழைத்துச் சென்றனா். தகவல் அறிந்து சிறுவனின் பெற்றோா் பள்ளிகொண்டா காவல் நிலையம் சென்றனா். அங்கு எஸ்.பி. மயில்வாகனன், பெற்றோரிடம் விசாரணைமேற்கொண்டாா்.

சிறுவன் பயந்த நிலையில் இருந்ததால், சிறுவன் பெற்றோருடன்வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த கடத்தல் சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். கடத்தலில் ஈடுபட்ட மா்ம நபா்கள்குறித்தும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காா் குறித்தும் தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.