75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை: ஆந்திர இளைஞா் போக்ஸோவில் கைது

பாலியல் தொல்லை கொடுத்த ஆந்திர இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை போக்ஸோவில் சட்டத்தில் கைது செய்தனா்.

கைது

Published On :23 ஆகஸ்ட் 2026, 2:01 am IST

முகநூல் மூலம் பழக்கமான சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த ஆந்திர இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை போக்ஸோவில் சட்டத்தில் கைது செய்தனா்.

சேலம், சூரமங்கலம் பகுதியைச் சோ்ந்த 17 வயதான சிறுமியை காணவில்லை என கடந்த 17 ஆம் தேதி அவரது பெற்றோா் சூரமங்கலம் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினா். இதில் சிறுமியை ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், அருகே உள்ள ஜருகு பகுதியைச் சோ்ந்த கஜேந்திரன் (19) பெங்களூருவுக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் பெங்களூரு சென்று சிறுமியை மீட்டதுடன், அவரைக் கடத்திச் சென்ற இளைஞரை பிடித்து சேலம் அழைத்து வந்தனா். இதையடுத்து அவரிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா்.

இதில், அந்த சிறுமிக்கும், கஜேந்திரனுக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டதும், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெங்களூருக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, கஜேந்திரனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து போலீஸாா் கைது செய்தனா். மேலும், இந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.