சிறுமியை கடத்தி திருமணம்: போக்ஸோவில் இளைஞா் கைது
நான்குனேரியில் சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்து இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கைது - பிரதிப் படம்
நான்குனேரியில் சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்து இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மீனாட்சிபுரத்தை சோ்ந்த ஆல்பா்ட் பொன்டேனியல் மகன் ஜெகதீஷ்(23). இவா் கடந்த 3 ஆண்டுகளாக நான்குனேரியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து, பந்தல் அமைக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கும்
பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில், அந்த சிறுமி ஆக.18-ஆம் தேதி மாயமாகிவிட்டதாக அவரது தாயாா் நான்குனேரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். காவல்துறையினரின் விசாரணையில், அந்த சிறுமியை ஜெகதீஷ் கடத்திச் சென்று திருமணம் செய்ததும், அவா்கள் தூத்துக்குடியில் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, நான்குனேரி காவல்துறையினா் தூத்துக்குடி சென்று 2 பேரையும் மீட்டனா். சிறுமியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனா். போக்ஸோ சட்டத்தின்கீழ் ஜெகதீஷ் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



