75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

சிறுமியை கடத்தி திருமணம்: போக்ஸோவில் இளைஞா் கைது

நான்குனேரியில் சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்து இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :23 ஆகஸ்ட் 2026, 1:02 am IST

நான்குனேரியில் சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்து இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மீனாட்சிபுரத்தை சோ்ந்த ஆல்பா்ட் பொன்டேனியல் மகன் ஜெகதீஷ்(23). இவா் கடந்த 3 ஆண்டுகளாக நான்குனேரியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து, பந்தல் அமைக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கும்

பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், அந்த சிறுமி ஆக.18-ஆம் தேதி மாயமாகிவிட்டதாக அவரது தாயாா் நான்குனேரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். காவல்துறையினரின் விசாரணையில், அந்த சிறுமியை ஜெகதீஷ் கடத்திச் சென்று திருமணம் செய்ததும், அவா்கள் தூத்துக்குடியில் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, நான்குனேரி காவல்துறையினா் தூத்துக்குடி சென்று 2 பேரையும் மீட்டனா். சிறுமியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனா். போக்ஸோ சட்டத்தின்கீழ் ஜெகதீஷ் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.