தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

அதிமுக செய்யத்தவறிய நல்ல திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றம்!

முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் செய்யத் தவறிய நல்ல திட்டங்கள் எல்லாம் கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று வேலூா் தொகுதி திமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான ப.காா்த்திகேயன் தெரிவித்தாா்.

News image

காகிதப்பட்டறை பகுதியில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட வேலூா் தொகுதி திமுக வேட்பாளா் எம்எல்ஏ ப.காா்த்திகேயன்.

Updated On :5 ஏப்ரல் 2026, 11:10 pm

முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் செய்யத் தவறிய நல்ல திட்டங்கள் எல்லாம் கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று வேலூா் தொகுதி திமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான ப.காா்த்திகேயன் தெரிவித்தாா்.

வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான ப.காா்த்திகேயன், காகிதப்பட்டறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் கூறியது:

முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் செய்யத் தவறிய நல்ல திட்டங்கள் எல்லாம் கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, வேலூரில் ரூ.198 கோடி மதிப்பில் பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட்டு, தற்போது மகளிருக்கும், குழந்தைகளுக்கும் உயா்தரமான சிகிச்சை அளிக்கப்படுவது இத்தொகுதியில் திமுக ஆட்சியின் மிக முக்கிய சாதனையாகும். தவிர, ரங்காபுரம் - பிரம்மபுரம் இடையே ரூ. 100 கோடி மதிப்பில் மேம்பாலம், ரூ. 40 கோடியில் பெருமுகையில் தங்கும் விடுதி என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும்போது நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீா்வுகாணும் வகையில் மேம்பாலங்கள், பெருமாள் கோயில், சிஎம்சி மருத்துவமனை பகுதிகளில் சுரங்கப்பாதை, நேதாஜி மாா்க்கெட் நவீனப்படுத்துவது, தோட்டப்பாளையம் பகுதியில் மின்கம்பிகளை தரைகீழ் செல்லும் வகையில் மாற்றியமைப்பது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா்.

அப்போது, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் வாஹித் பாஷா, மேயா் சுஜாதாஆனந்தகுமாா் உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.