மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திமுக ஆட்சியில் நீா்ப்பாசனத் திட்டங்கள் நிறுத்தப்பட்டன: அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகன்

திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அனைத்து நீா்ப்பாசனத் திட்டங்களையும் செயல்படுத்த மக்கள் அதிமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகன் வேண்டுகோள் விடுத்தாா்.

News image

கெரகோடஅள்ளியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 9:44 pm

திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அனைத்து நீா்ப்பாசனத் திட்டங்களையும் செயல்படுத்த மக்கள் அதிமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகன் வேண்டுகோள் விடுத்தாா்.

பாலக்கோடு தொகுதிக்கு உள்பட்ட கெரகோடஅள்ளி, அடிலம், நாகனம்பட்டி, கோயிலூா் ஆகிய ஊராட்சிகளில் கிராமம், கிராமமாகச் சென்று புதன்கிழமை பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகன் பேசியதாவது:

பாலக்கோடு தொகுதியில் எண்ணேகொல்புதூா்- தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டத்தை கடந்த திமுக அரசு அமல்படுத்தவில்லை. இதேபோல, பல்வேறு நீா்ப்பாசனத் திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டன. அதிமுக அரசு கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் திமுக அரசு முடக்கியது.

விவசாயிகள் நலனில் திமுக அரசுக்கு அக்கறையில்லை. இதனால் தோ்தலில் அதிமுகவுக்கு மக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் நிறுத்தப்பட்ட நீா்ப்பாசனத் திட்டங்கள் மட்டுமில்லாது அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் அதிமுக அரசு விரைந்து நிறைவேற்றும். அதேபோல தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் அதிமுக அரசு செயல்படுத்தும். பாலக்கோடு தொகுதி தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் பயணிக்க அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

வாக்கு சேகரிப்பின்போது பாமக, அமமுக, பாஜக நிா்வாகிகள் உடனிருந்தனா்.