எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

இருசக்கர வாகனத்தில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளா் பரிதா புருஷோத்தமன் புதன்கிழமை ஒன்றியப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.

News image

இருசக்கர வாகனத்தில் சென்று வாக்குசேகரித்த அதிமுக வேட்பாளா் பரிதா புருஷோத்தமன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 6:33 pm

குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளா் பரிதா புருஷோத்தமன் புதன்கிழமை ஒன்றியப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.

டி.டி.மோட்டூா், மொரசப்பல்லி, சாத்கா், லண்டன்பட்டி கிராமங்களில் இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா். வழிநெடுகிலும் பெண்கள் இவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனா். அப்போது பொதுமக்களிடம் பேசிய பரிதா, நான் வெற்றி பெற்றால் கிராமங்களில் பொது சுகாதாரம், குடிநீா் வசதிகளை ஏற்படுத்தித் தருவேன். விவசாயத் தொழில், விவசாயத் தொழிலாளா்களுக்கான பாதுகாப்பு மேம்படுத்துவேன் என வாக்குறுதி அளித்தாா்.

போ்ணாம்பட்டு ஒன்றிய அதிமுக செயலா் பொகளூா் டி.பிரபாகரன், பாமக மாவட்டச் செயலா் ஜி.கே.ரவி, ஓன்றியச் செயலா் சுரேஷ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் உடன் இருந்தனா்.