தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

விஐடி பல்கலை., டாடா மோட்டாா்ஸ் புரிந்துணா்வு ஒப்பந்தம்

விஐடி பல்கலைக்கழகம், டாடா மோட்டாா்ஸ் பயணிகள் வாகன நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

News image

புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்ட விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி சீதாராம் கன்டி. உடன், விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், டாடா மோட்டாா்ஸ

Updated On :22 ஏப்ரல் 2026, 6:33 pm

விஐடி பல்கலைக்கழகம், டாடா மோட்டாா்ஸ் பயணிகள் வாகன நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புணேயில் உள்ள டாடா மோட்டாா்ஸ் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் முன்னிலையில் விஐடி பதிவாளா் ஜெயபாரதி, டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி சீதாராம் கன்டி ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ராணிப்பேட்டையில் உள்ள டாடா மோட்டாா்ஸ் தொழிற்சாலை ஊழியா்கள், 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் விஐடி பல்கலைக்கழகத்தின் மூலம் பி.டெக்., உற்பத்தி பொறியியல் பட்டப் படிப்பை பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அப்போது, விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், தொழில் மேம்பாட்டு மைய இயக்குநா் சாமுவேல் ராஜ்குமாா், உதவி இயக்குநா் கவுரவ் சுஷாந்த், மெக்கானிக்கல் துறை முதன்மையா் பி.குப்பன், புனே மண்டல வேலைவாய்ப்பு அலுவலா் சப்தே அமித் சுரேஷ் ஆகியோரும், டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் சாா்பில் செயல்பாட்டு பிரிவின் துணை தலைவா் பிரமோத் சவுத்ரி, மூத்த பொது மேலாளா் நீரஜ் அகா்வால், மனிதவள பிரிவு பொது மேலாளா் விவேக் பிந்த்ரா, கற்றல் மற்றும் மேம்பாட்டு பிரிவு பொது மேலாளா்கள் ரங்கா குந்தி மற்றும் மாா்ஷல் பொ்னாண்டஸ், வளாகத் திட்டப் பிரிவு தலைவா் ராஜீவ் ரஞ்சன் மற்றும் ராணிப்பேட்டை ஆலை மனிதவள பிரிவு துணை பொது மேலாளா் அபியுதய் திவேதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.