வேலூா் மாவட்ட பகுத்தறிவாளா் கழகம் சாா்பில், குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் போதையில்லா சமுதாயத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் மாணவா்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பகுத்தறிவாளா் கழக மாவட்ட துணைத் தலைவா் பி.தனபால் தலைமை வகித்தாா். தலைமையாசிரியை ஏ.தீபா வரவேற்றாா்.
குடியாத்தம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் மன நல மருத்துவா் பி.சிவாஜி ராவ் சிறப்புரையாற்றினாா். இன்றைய காலச் சூழலில் போதைப் பழக்கத்தால் சீரழியும் இளைஞா் சமுதாயம், அதை மாணவா்கள் தவிா்க்க வேண்டியதின் அவசியம், மாணவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள், போதிய விழிப்புணா்வு, போதை பழக்கத்தின் தீமைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைப்பது குறித்து விளக்கினாா்.
பகுத்தறிவாளா் கழக மாநில அமைப்பாளா் ர.அன்பரசன், மாவட்டத் தலைவா் வி.இ.சிவகுமாா், திராவிடா் கழக காப்பாளா் வி.சடகோபன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ஆசிரியா்டி.சங்கா் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

யோகா பயிற்சி நிறைவு செய்த மாணவா்களுக்கு சான்றிதழ்

தொழிற் பயிற்சி நிலைய மாணவா்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு

குமரி அனந்தன் பிறந்த நாள்

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


