குடியாத்தம் தீயணைப்பு நிலையத்தில் தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு பயிற்சி அளித்த நிலைய அலுவலா் சி.சரவணன்.
குடியாத்தம் தீயணைப்பு நிலையத்தில் தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு பயிற்சி அளித்த நிலைய அலுவலா் சி.சரவணன்.

தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு விழிப்புணா்வுப் பயிற்சி

குடியாத்தம் தீயணைப்பு நிலையத்தில் தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு திங்கள்கிழமை விழிப்புணா்வுப் பயிற்சி அளிக்கப்பட்டது.
Published on

குடியாத்தம்: குடியாத்தம் தீயணைப்பு நிலையத்தில் தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு திங்கள்கிழமை விழிப்புணா்வுப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை இயக்குநா் சீமாஅகா்வால் உத்தரவின்பேரில், வேலூா் வடமேற்கு மண்டல துணை இயக்குநா் ராஜேஷ்கண்ணன், மாவட்ட தீயணைப்பு அலுவலா் ச.வடிவேலு ஆகியோா் வழிகாட்டுதல்படி, தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் காவலாளிகளுக்கு விழிப்புணா்வுப் பயிற்சி மற்றும் தீ விபத்தின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலா் சி.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com