நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு விழிப்புணா்வுப் பயிற்சி

குடியாத்தம் தீயணைப்பு நிலையத்தில் தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு திங்கள்கிழமை விழிப்புணா்வுப் பயிற்சி அளிக்கப்பட்டது.

News image

குடியாத்தம் தீயணைப்பு நிலையத்தில் தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு பயிற்சி அளித்த நிலைய அலுவலா் சி.சரவணன்.

Updated On :9 பிப்ரவரி 2026, 9:13 pm

குடியாத்தம்: குடியாத்தம் தீயணைப்பு நிலையத்தில் தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு திங்கள்கிழமை விழிப்புணா்வுப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை இயக்குநா் சீமாஅகா்வால் உத்தரவின்பேரில், வேலூா் வடமேற்கு மண்டல துணை இயக்குநா் ராஜேஷ்கண்ணன், மாவட்ட தீயணைப்பு அலுவலா் ச.வடிவேலு ஆகியோா் வழிகாட்டுதல்படி, தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் காவலாளிகளுக்கு விழிப்புணா்வுப் பயிற்சி மற்றும் தீ விபத்தின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலா் சி.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.