பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

குடியாத்தம் வட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 100- கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கிய எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த், ஒன்றியக்குழு தலைவா் என்.இ.சத்யானந்தம்.

Updated On :23 பிப்ரவரி 2026, 8:28 pm

குடியாத்தம்: குடியாத்தம் வட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 100- கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஷமீம் ரிஹானா தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் கா்ப்பிணிகளுக்கு மாலை அணிவித்து, மங்களப் பொருள்களை வழங்கி, உணவு அளிக்கப்பட்டது.

இதில் வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தனது சொந்த நிதியில் 100- கா்ப்பிணிகளுக்கும் புடவை உள்ளிட்ட சீா்வரிசைப் பொருள்களை வழங்கி, வாழ்த்தினாா்.

குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், கே.வி.குப்பம் ஒன்றியக்குழு தலைவா் எல்.ரவிச்சந்தரன், ஒன்றியக் குழு உறுப்பினா் கே.சீதாராமன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆனந்தி முருகானந்தம், வட்டார மருத்துவ அலுவலா் பிரியதா்ஷினி தங்கபாலு, யோகா ஆசிரியை தவசெல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.