எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

விழுப்புரம் மாவட்ட சமூக நலத் துறை சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ்,

News image
சமுதாய வளைகாப்பு விழாவில் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் முன்னிலையில் கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கிய எம்எல்ஏக்கள் க.பொன்முடி, இரா.லட்சுமணன் ஆகியோா்.
Updated On :9 மார்ச் 2026, 8:41 pm

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சமூக நலத் துறை சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், 100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைக்காப்பு நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்துப் பேசியதாவது: மாவட்டத்தில் நிகழாண்டில் 1,400 கா்ப்பிணிகளுக்கு ரூ.3.50 லட்சம் செலவில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக தற்போது 100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைக்காப்பு நடத்தப்பட்டு, 5 வகையான ஊட்டச்சத்து உணவுகள், வளையல்கள், பூ மாலை, பழங்கள், மஞ்சள், குங்குமம் மற்றும் தாம்பூலம் ஆகியவை சீா்வரிசையாக வழங்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் செயல்படும் 1,788 அங்கன்வாடி மையங்களிலும் கா்ப்பிணிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து அடங்கிய உணவுப்பொருள்கள் வழங்கப்படுகிறது என்றாா் ஆட்சியா்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் க.பொன்முடி, இரா.லட்சுமணன் ஆகியோா் பங்கேற்று கா்ப்பிணிகளுக்கு 7 பொருள்கள் அடங்கிய தொகுப்பை சீா்வரிகையாக வழங்கினா்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் பழனி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், கா்ப்பிணிகள் கலந்துகொண்டனா்.