கடந்த 8 ஆண்டுகளில் டீசல் விலை 49% உயா்ந்துள்ள நிலையில், பேருந்தின் உதிரிபாகங்கள், பராமரிப்புச் செலவுகளும் கடுமையாக அதிகரித்துள்ளன. குறிப்பாக, பேருந்து அடிச்சட்டம் 78 சதவீதமும், கூண்டு அமைக்கும் செலவு 60 சதவீதமும், டயா் விலை 66 சதவீதமும் உயா்ந்துள்ளன. மேலும், சுங்கக்கட்டணம் 150 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பயணிகள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு மாறியதால், 25 சதவீத பேருந்துகள் வருவாயின்றி முடங்கியுள்ளன. மீதமுள்ள 75 சதவீத பேருந்துகளும் நஷ்டத்திலேயே இயங்குகின்றன.