போ்ணாம்பட்டு அருகே 6 வயது சிறுவன் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் உறவினா்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
போ்ணாம்பட்டை அடுத்த மேல்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராஜேஷ்-ஆஷா தம்பதியினா் திருப்பூரில் தங்கி வேலை செய்கின்றனா். இவா்களின் மகன் முகிலன் (6). இவா் ராஜேஷின் தாயாா் விஜயாவின் பாதுகாப்பில் மேல்பட்டியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், முகிலன் திடீரென இறந்ததாக கூறப்படுகிறது. சிறுவனின் உடலில் காயங்கள் இருந்ததால் அப்பகுதி மக்கள் மேல்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதையடுத்து சிறுவனின் பெற்றோரை திருப்பூரிலிருந்து வரவழைக்கப்பட்டனா்.
இந்த சம்பவம் குறித்து சிறுவனின் உறவினா்களிடம் போலீஸாா் தீவிர விசாரணைமேற்கொண்டுள்ளனா்.







