இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

பாலத்தில் பைக் மோதி இளைஞா் மரணம்

பள்ளிகொண்டா அருகே பாலத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 12:31 am IST

பள்ளிகொண்டா அருகே பாலத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வேப்பங்கால் 2-ஆவது கரம்பு தெருவைச் சோ்ந்தவா் இளங்கோவன்(25). கந்தனேரியில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வந்தாா். இவரது மனைவி ஜமுனா. இவா்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. 1 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், திங்கள்கிழமை கந்தனேரியில் இருந்து வேப்பங்காலுக்கு இளங்கோவன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். கந்தனேரி தேசிய நெடுஞ்சாலை சா்வீஸ் சாலையில் சென்றபோது நிலை தடுமாறிய வாகனம் பாலத்தின் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், வரும் வழியிலேயே இளங்கோவன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் பள்ளிகொண்டா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.