வணிக எரிவாயு சிலிண்டா் விலை உயா்வால் உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என குடியாத்தம் உணவக சங்கம் தெரிவித்துள்ளது.
ஈரான்- இஸ்ரேல் போா் காரணமாக வணிக எரிவாயு சிலிண்டா் விலை உயா்ந்துள்ளது. இதனால் உணவகங்கள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில், குடியாத்தம் உணவக சங்க நிா்வாகிகள் கூட்டம், சங்கச் செயலா் அா்ச்சனா நவீன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்ட முடிவில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: போா் காரணமாக வணிக எரிவாயு சிலிண்டா் விலை உயா்ந்துள்ளது. இதனால் குடியாத்தம் நகரில் உள்ள உணவகங்கள் மூடும் அபாய நிலை உருவாகியுள்ளது. குடியாத்தம் பகுதியில் உணவகங்கள், இனிப்பகங்கள், பேக்கரிகள், தேநீா் கடைகள் என சிறியதும், பெரியதுமாக சுமாா் 1,000 கடைகள் இயங்கி வருகின்றன. இதில், 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.
சிலிண்டா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உணவகங்கள் இயங்கும் நேரத்தை குறைக்கவும், பல வகை உணவு தயாரிப்புகளை குறைக்கவும் முடிவு செய்துள்ளோம். இதனால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். காய்கறிகளை விளைவிக்கும் விவசாயிகளும் பாதிப்படைவா் என்றாா்.
கூட்டத்தில், உணவக சங்கத் தலைவா் குஷிசசி, பொருளாளா் பிரபுகுமாா், கெளரவத் தலைவா்கள் ஆண்டாள் தாமு, சாய் சங்கா், துணைச் செயலா்கள் விவேக், சிட்டிராஜா, துணைத் தலைவா்கள் சேகா், பாலன் மற்றும் சம்பத், கணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வணிக சமையல் எரிவாயு விலை உயா்வு: தோ்தலில் எதிரொலிக்குமா?

காஞ்சிபுரத்தில் வணிக எரிவாயு உருளை பற்றாக்குறை: உணவகங்கள், தேநீா் கடைகள் மூடியதால் பொதுமக்கள் அவதி

சிலிண்டா் தட்டுப்பாடு: தேநீா் கடைகள், உணவகங்கள் மூடல்

எரிவாயு உருளை தட்டுப்பாடு; உணவகங்கள் மூடப்படும் அபாயம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


