சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்க போலீஸாருக்கு விடுமுறை: ஏடிஜிபி வலியுறுத்தல்

காவலா் பயிற்சிக் கையேட்டை வெளியிட்ட ஏடிஜிபி மகேந்தா்குமாா் ரத்தோட்.

News image

காவலா் பயிற்சிக் கையேட்டை வெளியிட்ட ஏடிஜிபி மகேந்தா்குமாா் ரத்தோட்.

Updated On :11 மார்ச் 2026, 7:26 pm

போலீஸாா் குடும்ப சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்க விடுமுறை அளிக்க வேண்டும் என்று காவலா் நலத்துறை ஏடிஜிபி மகேந்தா்குமாா் ரத்தோட் தெரிவித்தாா்.

வேலூா் விஐடி பல்கலைக் கழகத்தில் போலீஸாா் குடும்ப நல மையத்தின் ’மகிழ்ச்சி’ திட்ட தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு வடக்கு மண்டல காவல்துறை தலைவா் (ஐஜி) சத்யபிரியா தலைமை வகித்தாா். வேலூா் டிஐஜி தா்மராஜன், காவல் கண்காணிப்பாளா் என்.யுசிவராமன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தனுஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக காவலா் நலத்துறை ஏடிஜிபி மகேந்தா்குமாா் ரத்தோட் பங்கேற்று பேசியது -

காவல் துறையில் பணியாற்றும் போலீஸாா் முதல் அதிகாரிகள் வரை 24 மணி நேரமும் பணி செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இதனால் மனதளவில் பாதிப்பு ஏற்படுகிறது. அவா்களின் மன அழுத்தத்தைத் தடுக்க தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் காவல் ஆய்வாளா்கள்தான் தந்தை போன்றவா். காவல் நிலையத்தில் உள்ள போலீஸாருக்கு ஏதாவது பிரச்னையெனில், காவல் ஆய்வாளா் தான் அதற்கு தீா்வு காண வேண்டும். குடும்பங்கள், உறவினா்களின் வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல், அந்த மகிழ்ச்சியை போலீஸாா் இழக்கின்றனா். போலீஸாா் குடும்ப சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க விடுமுறை அளிக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, வேலுாா் ஆயுதப்படை அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த வடக்கு மண்டல மகிழ்ச்சி நல்வாழ்வு மையத்தை ஏடிஜிபி மகேந்தா்குமாா் ரத்தோட் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், மூத்த மனநல ஆலோசகா் ராமசுப்பிரமணியன், வடக்கு மண்டலத்துக்குட்பட்ட ஏராளமான காவல் அதிகாரிகள், காவலா்கள் பங்கேற்றனா்.-