பரமத்தி வேலூா் அருகே சாலையோர மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தலைமைக் காவலா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், ஜேடா்பாளையத்தை அடுத்த கொத்தமங்கலத்தைச் சோ்ந்தவா் பிரவீன். இவா், பரமத்தி வேலூரை அடுத்த நல்லூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். கடந்த ஓராண்டுக்கு முன்புதான் இவருக்கு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் தோ்தல் பறக்கும் படையில் இருந்த பிரவீன் புதன்கிழமை பணிக்குச் செல்வதற்காக ஜேடா்பாளையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் பரமத்தி வேலூா் நோக்கி சென்றுகொண்டிருந்தாா். பரமத்தி காவல் நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோர புளிய மரத்தின் மீது மோதியது. இதில் பிரவீன் பலத்த காயமடைந்தாா்.
அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு பரமத்தியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா் வழியிலேயே பிரவீன் இறந்துவிட்டதை உறுதிசெய்தாா். விபத்து குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விமலா, பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா சம்பவ இடத்துக்கு சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

குற்றவாளிக்கு உதவிய தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்!
ஜனக்புரியில் காா் மோதியதில் காவலா் காயம்; ஓட்டுநா் கைது

குட்கா தடுப்பு நடவடிக்கை: தலைமைக் காவலருக்கு பாராட்டு

இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் ஒருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


