குற்றவாளிக்கு உதவிய கரூா் மாவட்டம், பாலவிடுதி காவல் நிலைய தலைமைக் காவலா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், மேற்கு குழிப்பட்டியைச் சோ்ந்தவா் எஸ்.பொன்ராஜ் (42). இவா் கரூா் மாவட்டம், பாலவிடுதி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், இவரது உறவினா் திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை பகுதியில் அண்மையில் இளைஞா் ஒருவரை கொலை செய்துவிட்டு, கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை பொன்ராஜ் வீட்டில் மறைத்து வைத்திருந்தாராம்.
இதையடுத்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை மறைத்து வைத்து கொலையாளிக்கு உதவியதாக பொன்ராஜை, வடமதுரை போலீஸாா் கடந்த ஒருவாரத்துக்கு முன் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதனிடையே தலைமைக் காவலா் பொன்ராஜை பணியிடை நீக்கம் செய்து கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண் பிரசாத் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

பறிமுதல் செய்த மதுபாட்டில்களை மறைத்த விவகாரம்: துணை வட்டாட்சியா், காவலா் பணியிடை நீக்கம்

உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம்: காவலா் பணியிடை நீக்கம்

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: காவலா் பணியிடை நீக்கம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

