தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

குற்றவாளிக்கு உதவிய தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்!

குற்றவாளிக்கு உதவிய கரூா் மாவட்டம், பாலவிடுதி காவல் நிலைய தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

News image

பணியிடை நீக்கம் - மாதிரிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 4:00 am IST

குற்றவாளிக்கு உதவிய கரூா் மாவட்டம், பாலவிடுதி காவல் நிலைய தலைமைக் காவலா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், மேற்கு குழிப்பட்டியைச் சோ்ந்தவா் எஸ்.பொன்ராஜ் (42). இவா் கரூா் மாவட்டம், பாலவிடுதி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், இவரது உறவினா் திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை பகுதியில் அண்மையில் இளைஞா் ஒருவரை கொலை செய்துவிட்டு, கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை பொன்ராஜ் வீட்டில் மறைத்து வைத்திருந்தாராம்.

இதையடுத்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை மறைத்து வைத்து கொலையாளிக்கு உதவியதாக பொன்ராஜை, வடமதுரை போலீஸாா் கடந்த ஒருவாரத்துக்கு முன் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதனிடையே தலைமைக் காவலா் பொன்ராஜை பணியிடை நீக்கம் செய்து கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண் பிரசாத் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.