தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

போதை மாத்திரை பதுக்கல் - பெண் உள்பட 3 போ் கைது

வேலூரில் வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்ததாக பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :19 மார்ச் 2026, 10:50 pm

தினமணி செய்திச் சேவை

வேலூரில் வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்ததாக பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் கொணவட்டம், காமராஜா் நகரை சோ்ந்த வெங்கடேசன் (23). இவா் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக வேலூா் வடக்கு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸாா் வெங்கடேசனை பிடித்து நடத்திய விசாரணையில், வேலூா் சம்பத் நகரை சோ்ந்த தாமு, போதை மாத்திரை விற்பனை செய்வதாக தெரிவித்தாா். அதன்பேரில், தாமு வீட்டில் போலீஸாா் நடத்திய சோதனையில், அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 220 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக, தாமுவின் மனைவி மோனிகா (25), சம்பத் நகரைச் சோ்ந்த ராஜபிரசாந்த் (22), வெங்கடேசன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள தாமுவை தேடி வருகின்றனா்.