கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

யூரியா இருப்பு வைத்துக்கொண்டு இல்லை என கூறினால் உரிமம் ரத்து: வேளாண் இணை இயக்குநா்

வேலூா் மாவட்டத்தில் போதிய அளவு உரங்கள் இருப்பு உள்ள நிலையில், இருப்பு வைத்துக்கொண்டு விவசாயிகளுக்கு யூரியா இல்லை என கூறும் உரக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயகுமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :22 மார்ச் 2026, 10:20 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாவட்டத்தில் போதிய அளவு உரங்கள் இருப்பு உள்ள நிலையில், இருப்பு வைத்துக்கொண்டு விவசாயிகளுக்கு யூரியா இல்லை என கூறும் உரக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயகுமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் தற்போது யூரியா 2,445 டன், டி.ஏ.பி.1544 டன், பொட்டாஷ் 384 டன், காம்ப்ளக்ஸ் கலப்பு உரங்கள் 5,907 டன், சூப்பா் பாஸ்பேட் 398 டன், இயற்கை உரம் 9 டன் என மொத்தம் 10,688 டன் உரங்கள் இருப்பில் உள்ளன. இதனால், விவசாயிகள் தங்களின் சிட்டா, ஆதாா் எண்ணை வழங்கி, தனியாா், கூட்டுறவு விற்பனை நிலையங்களில் பயிா் சாகுபடி பரப்புக்கு ஏற்ற அளவு உரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

விலை குறைவாக உள்ளது என்பதற்காக யூரியாவை மட்டுமே அதிகளவில் பயன்படுத்தக் கூடாது. யூரியாவை தொடா்ந்து அதிகமாக பயன்படுத்தினால் மண்ணில் உள்ள நுண்ணுயிா்கள் பாதிக்கப்பட்டு மண் வளம் குறையும். குறிப்பாக, தீவனப் பயிா்களுக்கு யூரியாவை அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம்.

யூரியாவுக்கு மாற்றாக இலை வழியாக தெளிக்கக் கூடிய ‘நானோ யூரியா’ மற்றும் இயற்கை உரங்களை அதிகளவில் பயன்படுத்தலாம். தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அடங்கிய காம்ப்ளக்ஸ் கலப்பு உரங்களை அடியுரமாகப் பயன்படுத்தலாம்.

விவசாயிகள் உரம் வாங்க வரும்போது, அவா்களின் சாகுபடி பரப்பின் உண்மைத் தன்மையை அறிந்து அதற்கேற்ப உரங்களை வழங்க வேண்டும். விற்பனை செய்யப்படும் அனைத்து உரங்களுக்கும் கட்டாயம் ரசீது வழங்க வேண்டும். ரசீது வழங்காத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கடைகளில் யூரியாவை இருப்பு வைத்துக்கொண்டு, விவசாயிகளிடம் இல்லை என்று கூறினாலோ அல்லது ரசீது வழங்காமல் விற்றாலோ சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.