விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 டன் யூரியா, கோதுமை பறிமுதல்

News image

பதுக்கிவைக்கப்பட்டிருந்த யூரியாவை பாா்வையிடும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா்.

Updated On :24 பிப்ரவரி 2026, 1:16 am

கோபி அருகே சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 30 டன் யூரியா, கோதுமையை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஈரோடு மாவட்டம், நம்பியூா் அருகேயுள்ள காமராஜ் நகா் பகுதியில் உள்ள தனியாா் கிடங்கில் மத்திய அரசின் மானிய விலை யூரியாவை பதுக்கிவைத்து வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது

இதையடுத்து, குற்றப் புலனாய்வுத் துறை தலைமைக் காவலா்கள் சக்திவேல், சரவணன் உள்ளிட்டோா் கிடங்கில் திங்கள்கிழமை மாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு 540 மூட்டை யூரியா, 60 மூட்டை கோதுமை என மொத்தம் 30 டன் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து நம்பியூா் வட்டார வேளாண்மைத் துறை உதவி அலுவலா் உமா மகேஸ்வரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அவருடன், உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ராஜ்குமாா், உதவி ஆய்வாளா் மேனகா உள்ளிட்டோா் விசாரணை நடத்தி வருகின்றனா்.