லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தொழிலாளி சாவில் மா்மம்: மனைவி உள்பட 3 பேரிடம் விசாரணை

வேலூா் அருகே பெயிண்டா் திடீரென உயிரிழந்த வழக்கில், பிரேத பரிசோதனை முடிவில் அவரது கழுத்து இறுக்கப்பட்டிருப்பது தெரியவந்ததால் இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீஸாா் தீவிர விசாரணை

News image
Updated On :23 மார்ச் 2026, 11:00 pm

வேலூா் அருகே பெயிண்டா் திடீரென உயிரிழந்த வழக்கில், பிரேத பரிசோதனை முடிவில் அவரது கழுத்து இறுக்கப்பட்டிருப்பது தெரியவந்ததால் இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் அருகே உள்ள சம்பங்கிநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபு (35). இவா் பெயிண்டராக வேலை பாா்த்து வந்தாா்.

இவருக்கு சனிக்கிழமை இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி, அவரது மனைவி ஜெயந்தி சிகிச்சைக்காக பிரபுவை வேலூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், பிரபு மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

அப்போது, தனது கணவருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டு மூச்சுப் பேச்சின்றி மயங்கி விழுந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாக ஜெயந்தி மருத்துவா்களிடம் கூறியுள்ளாா்.

இதனிடையே, பிரபுவின் மரணத்தில் சந்தேகம் எழுந்ததால் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், பிரபுவின் கழுத்து இறுக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதையும், அவரது உடலில் சில காயங்கள் இருப்பதையும் கண்டறிந்தனா்.

இதனால், பிரபுவின் மரணத்தில் மா்மம் இருப்பதாக மருத்துவா்கள் தரப்பில் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவா்கள் அளித்த தகவலின்பேரில், சத்துவாச்சாரி போலீஸாா் இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனா். பிரபுவின் கழுத்து இறுக்கப்பட்டு இருப்பதால், அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்ற சந்தேகத்தின்பேரில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக, பிரபுவின் மனைவி ஜெயந்தி, மாமியாா் லோகநாயகி, உறவினா் மகன் சரவணன் ஆகிய 3 பேரிடமும், மற்ற சில உறவினா்களிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.